கோவை ஜூன் 20 கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது54 )இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 15 -ம் தேதி மதியம் 3 மணிக்கு வியாபாரத்தை முடித்ததும் கடையை மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ,பெண்ணும் வந்தனர். அவர்கள் சக்திவேலிடம் நாங்கள் இருவரும் புதுமண தம்பதி.பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தோம். ஏ.டி.எம். கார்டு இருப்பதால் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்துவிட்டோம். இங்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்றபோது எங்களது கார்டு வேலை செய்யவில்லை. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அவசரமாக ரூ 2 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களிடம் கையில் இருக்கும் பணத்தை கொடுத்தால் எங்களது செல்போனில் இருந்து ” ஜி பே” மூலமாக உங்களுக்கு பணம் அனுப்பி விடுவோம் என்று கூறினர் .ஆஸ்பத்திரி அவசரம் என்பதால் இதை நம்பிய சக்திவேல் அவர்களிடம் ரூ 2 ஆயிரம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் ஜி பே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாக கூறி செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் .காண்பித்தனர் அதை பார்த்ததும் அவரும் பணம் வந்து விட்டதாக கருதினார். அதன் பிறகு அவர்கள் இன்னும் ரூ 2ஆயிரம்கொடுத்தால்மருந்து -மாத்திரைகள் வாங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்கள். அதையும் ஜி பே மூலம் அனுப்பி விடுவதாக கூறினார் அதை நம்பி மீண்டும் அவர் ரூ 2 ஆயிரம் கொடுத்தார். உடனே அவர்கள் ஜிபே மூலம்அனுப்பி விட்டதாக கூறி செல்போன் குறுஞ்செய்தியை காண்பித்து விட்டு சென்றனர் .நீண்ட நேரத்துக்கு பிறகு சக்திவேல் தனது வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை சரிபார்த்தார். அப்போதுதான் தன்னிடம் பணம் வாங்கிய தம்பதி அனுப்பியதாக கூறிய பணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்பதும் அவர் தன்னிடம் ரூ. 4 ஆயிரம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து அவர் கவுண்டம்பாளையம்போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினார் அப்போது இந்த தம்பதிகள் பலரிடம் இதே போல பண மோசடி செய்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மோசடி தம்பதியை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் மோசடி தம்பதிகள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கண்டறிந்துவிசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த தம்பதி சுகுணாபுரம்,பழைய பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் ( வயது 21) அவரது மனைவி சர்மிளா பானு (வயது 20) என்பதும் தெரியவந்தது. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மொத்தம் 112 பேரிடம் ரூ 2 லட்சத்துக்கு மேல் பண மோசடி செய்தது தெரிய வந்தது. கைதான தம்பதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0