கோவை மே 31 கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி (வயது 55) இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 50)அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ரங்கம்மாள் ஆகியோருடன் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் கோவை அவினாசி ரோடு சின்னியம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்து சரக்கு வேன் திடீரென்று ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாகாளி உட்பட 3 பேர் மீது மோதியது .இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் செல்வி பரிதாபமாக இறந்தார் .படுகாயம் அடைந்த ரங்கம்மாள், மாகாளி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மாநகரகிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் இதில் சரக்கு வேனை ஒட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது .இதை தொடர்ந்து சிறுவனிடம் சரக்குவேனை ஓட்டுவதற்கு கொடுத்த அந்த வாகனத்தில் உரிமையாளரான பைலட் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வாகனம்ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0