ஒரே நாளில் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை மே 13 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள சோமனூர், செந்தில் நகரை சேர்ந்தவர் ராம்குமார் ( வயது 44) குடிப்பழக்கம் உடையவர் .இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல மதுக்கரை பக்கம் உள்ள மேட்டங்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40)குடிப்பழக்கம் உடையவர்.இவரும் குடும்ப தகராறு காரணமாகவீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி ரங்கநாயகி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.