கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி இந்துமதி (வயது 57) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார்..அப்போதுஅவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். இதுகுறித்து இந்துமதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





