கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் மதுக்கரை, பொள்ளாச்சி, அன்னூர், செட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்டகேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மதுக்கரை போலீசார் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக ஆவாராம்பாளையம் உதய செல்வன் ( வயது 44) திருவாரூர் கோவிந்தராஜ் (வயது 68) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச் சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக திண்டுக்கல், புது சத்திரம் ,அண்ணா நகரை சேர்ந்த முனியப்பன் ( வயது52) கைது செய்யப்பட்டார். அன்னூர் செல்லப்பம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக திருப்பூர் ஓ .ஆர் . கே. புரம், கௌதம் (வயது 23) கைது செய்யப்பட்டார். ஒத்த கால் மண்டபம் ,பஸ் ஸ்டாப்பில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக கிணத்துக்கடவு, சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் ( வயது23) கைது செய்யப்பட்டார் இவர்களிடமிருந்து கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0