கோவை ஜூன் 4 கோவை மாநகர பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளன. இங்கு உரிமை கோரப்படாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு கேட்பாரற்று இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கடந்த ஆண்டில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை ஏலம் விட்டதின் மூலம் ரூ.15 லட்சம் வருவாய் கிடைத்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை வாகனம் நிறுத்தும் இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கேட்பாரற்று பல நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த 500 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள். அந்த தொகை மூலம் மாநகர பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0