கோவை ஜூன் 24 கோவை உக்கடம் ,பெரிய கடை வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் .”பிருந்தாவன் புட்ஸ் ப்ராடக்ட்ஸ்” என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்குநெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார் .இவர் அந்த நிறுவனத்திற்குரிய பணம் ரூ.52 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின்தலைமையிட பொது மேலாளர் ராஜேஷ் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி இது தொடர்பாக விசாரணை நடத்தி நாகராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0