கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ்இன்ஸ்பெக்டர் சரவணன் ,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 610 போதை மாத்திரைகளும், 500 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் இவர்கள் பீளமேடு பயோனியர் மில் போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 27) ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த கோகுல் ( வயது 25 )பீளமேடு எப். சி .ஐ . ரோடு ,ஸ்ரீ ராம் நகரை சேர்ந்த இளவரசன் ( வயது21) ரத்தினபுரி, மதியழகன் வீதி வினோத்குமார் ( வயது34) ரத்தினபுரி அண்ணா வீதி அரிகிருஷ்ணன் ( வயது34 )என்பது தெரியவந்தது . 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0