கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேஷ்,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பாலம் அருகே நேற்று இரவுரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்து ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அசோக் நகரை சேர்ந்த வினோத் என்ற வினோத்குமார் ( 34 ) கிருஷ்ணம்மாள் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் ( 26 ) கே. கே. புதூர். ரகு (22) சாய்பாபா கோவில் தினேஷ் ( 20 ) அருண் நகர் ராஜேஷ் ( 24 ) வேலாண்டிபாளையம் தென்னவன் ( 24 ) கவுண்டபாளையம் தண்டபாணி (17)ஆந்திராவை சேர்ந்த பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0