கோவை: சூலூர் ஒன்றியம் காடாம்பாடி உயர்நிலைப் பள்ளிக்கு புதிதாக ஓர் வகுப்பறை கட்டிடம் சுமார் 18 லட்ச மதிப்பீட்டில் ஆதிரை அறக்கட்டளை மூலம் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் அமர்வதற்கு இருக்கையில் வழங்கி மாணவர்களின் பயன்பாட்டுக்கு தலைமை ஆசிரியர் வசம் கடம்பாடி ஊராட்சி உறுப்பினர்கள், இளைஞன் நற்பணி மன்றத்தார், பள்ளியின் மீது அக்கறை கொண்ட ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆதிரை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினார்கள் . அதன் ஒரு பகுதியாக அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆதிரை அறக்கட்டளையின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
