நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் இருந்து விழுந்து பால் வியாபாரி சாவு.கோவை மே 8 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 52) பால் வியாபாரி .இவர் கே.ஜி. சாவடி – எட்டிமடை ரோட்டில் பால் வியாபாரத்திற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோட்டின் குறுக்கே பாய்ந்த நாய் அவரது பைக்கில்மோதியது. இதனால் நிலை தடுமாறி சின்ன ராஜ் பைக்குடன் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகன் அருண்குமார் கே. ஜி. சாவடி போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0