ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை

கோவை மே 14 கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் பக்கம் உள்ள தேவாங்கு நகரை சேர்ந்தவர் முத்துசாமி . இவரது மகன் திருப்பதி ( வயது 32) குடிப்பழக்கம் உடையவர்.இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்தார்.இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் வாழ்க்கையில் பொறுப்படைந்த திருப்பதி நேற்று அவருடைய வீட்டில் மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது அக்கா காளியம்மாள் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.