கோவை ஜூன் 3 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கணியூர், ஷீபா நகரை சேர்ந்த சுஜித் குமார் (வயது 32) என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேன் நிறுத்தபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0