கோவையில் 21 கிலோ உயர்ரக கஞ்சாகடத்தல். வடமாநில வாலிபர் கைது

கோவை ஜூன் 5
கோவை மாநகரத்தில் போதையின் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்போது போதை பொருள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.. அதன் ஒரு பகுதியாக
கோவை மாநகர காவல் ஆணையர்
சரவண சுந்தர் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் . உதயகுமார், குனியமுத்தூர் காவல் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம்ஆகியோர் மேற்பார்வையில்
செல்வபுரம் காவல் நிலைய சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் .அழகுராஜ் தலைமையில் செல்வபுரம் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு மற்றும்போலீஸ்காரர்கள் ராஜபாண்டி, ஜெஸ்வின் ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தெலுங்கு பாளையம் வேடப்பட்டி ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்தஒருவரைசந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார். அவர் கஞ்சா கடத்தல் பேர்வழி என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து 21 கிலோ உயர்ரக கஞ்சா, மற்றும்கஞ்சா விற்ற பணம் ரூ.26 ஆயிரம், மற்றும் டிஜிட்டல் எடை மெஷின் ,கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இதை யடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கைது செய்தனர்.விசாரணை அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமன்சிங் (வயது 21) என்பது தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.