வீட்டு முன் நிறுத்தி இருந்த கார் திருட்டு

கோவை .ஜூன் 6 கோவை ராம்நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) ஒர்க்ஷாப் அதிபர் .இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். காருக்குள் விலை உயர்ந்த 2 செல்போனும் வைத்திருந்தார்.இரவில் யாரோ காரை திருடி சென்று விட்டனர் .இது குறித்து காட்டூர் போலீசில் சந்தோஷ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.