இரண்டாவது திருமணம் முடித்து 15 நாளில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

கோவைஜூன் 9 கோவை ஒண்டிபுதூர், எஸ். எம். எஸ். லே-அவுட்டை சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் கார்த்திக் ( வயது 30) இவருக்கு திவ்யா என்ற மனைவியையும், 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் கடந்த இரு வாரத்துக்கு முன்பு சவுந்தர்யா என்ற பெண்ணை கார்திக் 2-வது திருமணம் செய்து கொண்டார். நேற்று முதல் மனைவி வெளியே சென்ற போது கார்த்திக் அவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில்உள்ள விட்டதில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்