கோவை ஜூன் 14 கோவை சரவணம்பட்டியைஅடுத்த வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்தவர் பினு மேத் சா ராஜேஷ் (வயது 36) சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் வினீத் வர்மா (வயது 10) துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் படித்து வந்தார். மேலும் இவர் காளப்பட்டியில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த பயிற்சி வகுப்பிற்கு பினு மேத்சா ராஜேஷ் தனது மகன் வினீத் வர்மாவை காலை 5 மணிக்குஅழைத்துச் செல்வது வழக்கம். வழக்கம் போல நேற்றும் காலை 5 மணிக்கு ஸ்கேட்டிங் வகுப்பிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர் அப்போது சரவணம்பட்டி காளப்பட்டி ரோடு பிரிவில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளை தந்தை ஓட்டினார். பின்னால் அவரது மகன் இருந்தார் .இந்த நிலையில் பின்னால் இருந்து வேகமாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை பினு மேத்சா ராஜேஷ், மகன் வினித் வர்மாவும் தலையில் பலத்த அடைந்து அதே இடத்தில் பரிதாபமாகஇறந்தனர் .இது பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் மனோகரன் (வயது 45) என்பவர் கைது செய்தனர் .தந்தை மகன் ஒரே நேரத்தில் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0