கோவை ஜூன் 14 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரமங்கலம், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (55) இவர் கணபதி மணியக்காரன் பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .அங்கு ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி தமிழரசி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0