கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 7பேர் கைது

கோவை ஜூன் 14 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள பயோனியர் மில் ரோடு மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும், 2 பைக்கும்பறிமுதல் செய்யப்பட்டது..விசாரணையில் அவர்கள் பீளமேடு புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜ் (22)பீளமேடு கங்குவார் வீதி பிரவீன் குமார் ( 22) ஜெகநாதன் காலனி, அஸ்வின் ( 21 ) ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகர், ராமன் சூர்யா (19) பீளமேடு எல்லை தோட்டம் ரோடு ரவிக்குமார் ( 22 )தண்ணீர் பந்தல் ரோடு, தியாகி குமரன் வீதி பிரதீப் (22) பீமேடு புதூர் ஜெகநாதன் காலனி ராகுல் ( 20)என்பது தெரிய வந்தது.இவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். 7பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.