ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 851 ஆம் ஆண்டு கொடியேற்றம் மற்றும் கந்தூரி விழா கடந்த 28.05.2025 அன்று புதன்கிழமை பனைக்குளம் தாஹிரா சபாவுடன் கொடி ஊர்வலம் வரப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இரவு நேரத்தில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மௌலித் எனும் இறை வசனம் ஓதப்பட்டு உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வந்தன.
இறுதி நாளான இன்று அத்திக்கடை, அபுபக்கர் பாவா அவர்களின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெற்று மறுநாள் அதிகாலை மௌலித் எனும் இறைவசனம் முடிவுற்று உலக நன்மைக்காகவும் உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு சேது தம்பி கேட்டரிங் சமையல் நிபுணர் புகாரி சமையல் செய்து பொதுமக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டது. இதில் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் , 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் விழா குழு நிர்வாகிகள் , ஓடைக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவினை எம்ஆர்எப் அசோசியேட்ஸ் இளைஞர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.