கோவை விமான நிலையத்தில் பயணி அணிந்திருந்த ஷூவில் துப்பாக்கி தோட்டா சிக்கியது

போலீஸ் விசாரணை.கோவை ஜுன் 16 கோவை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ( சி.ஐ.எஸ்.எப்) சோதனை செய்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த பயணிஒருவரின் காலில் அணிந்திருந்த ஷூவை நவீன கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர். அதில் அந்த பயணியின் ஷூவில்துப்பாக்கி தோட்டா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.இதை யடுத்து அந்த பயணியை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர் .அதில் அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷிபு மேத்யூ ( வயது 48) என்பது தெரிய வந்தது. அத்துடன் அவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் நேற்று மதியம் இண்டிகோ விமானத்தில் அபுதாபிக்கு செல்ல கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது அவர் பீளமேடு காவல்நிலையத்தில் ஒப் படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தனது ஷூவில் துப்பாக்கி தோட்டா எப்படிவந்தது? என்பது தனக்கு தெரியாது என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். .இந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.