டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது விற்ற ஊழியர் கைது.

கோவை ஜூன் 16 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ்ஆகியோர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1756) பாரில்நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக மது பாட்டில்களைபதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரிபகுதியைச் சேர்ந்த பார் ஊழியர் ராமநாதன் ( வயது 50) கைது செய்யப்பட்டார். அங்கு பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 48 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரூ2600 பறிமுதல் செய்யப்பட்டது.