திருப்பத்தூர் மாவட்டஆட்சித் தலைவர் முன்னிலையில் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளரை திட்டி – மிரட்டல் விடுத்த பி..ஆர். ஒ. சுப்பையா மீது காவல்துறை வழக்கு பதிவு

உடனடி இடமாற்றம்.
திருப்பத்தூர் : ஜூன் -18திருப்பத்தூர் மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் சுப்பையா. இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தரம் பிரித்து பேசுவதும் , சிறு பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாகவும் மற்ற பத்திரிகைகளிடம் ஜால்ரா அடித்து பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதைக் கண்டித்துஇவர் மீது கடந்த 17/03/2025 அன்று திருப்பத்தூர் பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திர வல்லியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மாதங்கள் கடந்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை கண்டித்து கடந்த ஏப்ரல் மாதம் 04/04/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூர் பிரஸ் கிளப், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், மற்றும் தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம் இணைந்து மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என உறுதி அளித்தார்கள். இது சம்பந்தமாகவும் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் அதிருப்தி அடைந்த திருப்பத்தூர் பிரஸ் கிளப் நிர்வாகிகள் கடந்த ஏப்ரல் மாதம் 11 – ந் தேதி திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினார்கள் இந்த சம்பவம் குறித்து மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து திருப்பத்தூர் மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வந்தார் இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21/05/2025 அன்று நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ஒன்றியம் நாட்றம்பள்ளி தாலுக்கா பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் நியூஸ் எக்ஸ்பிரஸ் நிருபர் இ.ஆனந்தகுமாரை வெளியே போடா என்றும் உன்னை யார் வரச் சொன்னது ? நீ எல்லாம் பத்திரிக்கையாளரே கிடையாது உன்னை நான் அங்கீகரிக்கவில்லை என ஜாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாக மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பேசியதால் இதனை வீடியோவாக பதிவு செய்த பத்திரிகையாளரையும் தரக்குறைவாக பேசிய வீடியோ ஆதாரம் முழுவதும் பதிவு செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கபட்டது. 24.05.2025 அன்று பிஆர்ஓ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவை நேரில் சந்தித்து மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு மற்றும் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கப்பட்டது. இம் மனு வாணியம்பாடி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
மேலும் திருப்பத்தூர் பிரஸ் கிளப் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்த நிலையில் வீடியோ ஆதாரங்களை கொண்டுசென்னையில் உள்ள செய்தி தொடர்பு துறை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இந்த நிலையில் மக்கள் தொடர்பு அதிகாரி சுப்பையா காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக கடந்த 27.05.2025 அன்று மாற்றப்பட்டார். மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா இதற்கு முன் பணியாற்றிய மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்ட வகையில் அவர் பணியாற்றியமாவட்டங்களில் எல்லாம் இதுபோன்று பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இதற்கு முன் 4 தடவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்த முறை 5-வது தடவையாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பி.ஆர். ஒ சுப்பையா மீது 09/06/2025 அன்று (BNS) 2003 ACT 1989 சட்டத்தின் கீழ் 296( b),3(1)r வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அலுவலருக்கு ஒரு முன் உதாரணமாகவும், பாடமாகவும் இருக்க வேண்டும். எனவே எந்த மாவட்டமாக இருந்தாலும் பத்திரிகையாளர்களை தர குறைவாக பேசி,,பிரிவினை காட்டும் மக்கள் தொடர்புஅதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.மேலும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று தர முன் வர வேண்டும். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நலிவடைந்த பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு திருப்பத்தூர் பிரஸ் கிளப் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.