கோவை வியாபாரி திடீர் மாயம்

கோவை ஜூன் 18 கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவில் உள்ள சுப்பையாதேவர் வீதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் சபரீஷ் ( வயது 28 )இவர் கடந்த 3 ஆண்டுகளாக ராமநாதபுரம் ,கிட்னி சென்டர் ரோட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் கடைக்கு சாமான்கள் கொள்முதல் செய்ய வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவரது மனைவி சரண்யா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.