கோவை ஜூன் 19 கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர், பொம்ம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி திலகவதி ( வயது 58) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் பாஸ்கர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார் இதனால் மனம உடைந்த திலகவதி மன அழுத்தத்தோடு காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் நவீன்குமார் பேரூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0