கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ் .புரம், கிழக்கு ராமலிங்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்த ஞான பிரகாசம் ( வயது 44) ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியை சேர்ந்த மகபூநிஷா ( வயது 38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே போல துடியலூர் ஜி. என். மில், கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கிருந்த பெரியநாயக்கன்பாளையம் ரங்கா நகரை சேர்ந்த பாவனா ( வயது 25 )ஜி,என். மில் , கணேஷ் நகரை சேர்ந்த மாரி ராஜன் ( வயது 31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவரை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0