கோவை ஜூன் 21 கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவை கரும்பு கடையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சபீர் அகமது, சுல்தான் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் தேசிய விசாரணை முகமை என். ஐ. ஏ. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதை கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கைதான இளைஞர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவியும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல், சமூக ஆர்வலர்கள் ஜனநாயக வாதிகளின் பங்கேற்போடு இந்த அநீதிக்கு எதிராக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0