கோவை ஜூன் 21 கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா ( வயது54) இவருக்கு காரமடையை சேர்ந்த வெள்ளிங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )என்பவர் அறிமுகமானார்.அவர் புஷ்பலதாவிடம் குறைந்த வலையில் நகை வாங்கி தருவதாக கூறினார் இதை புஷ்பலதா நம்பினார்.இதற்காக தனது 53.7 கிராம் தங்க நகைகளை கொடுத்தார்.இந்த நகைகளை அமுதா தனியார் வங்கியில்அடகு வைத்து ரூ.2லட்சத்து 95 ஆயிரம் வாங்கினார் பின்னர் அவர் கூறியபடி குறைந்த விலையில் நகை வாங்கி கொடுக்கவில்லை.பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை, ஏமாற்றி விட்டார் .இது குறித்து புஷ்பலதா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து அமுதாவை நேற்று கைது செய்தார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0