ஸ்கூட்டர்கள் மோதல் :ஒருவர் சாவு.

கோவை ஜூன் 21 கோவை சுந்தராபுரம் சிட்கோ, பிள்ளையார்புரத்தைசேர்ந்தவர் கணேசன் ( வயது 46) இவர் நேற்று பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி சிவன் கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ஸ்கூட்டரும், இவரது கூட்டரும் மோதிக்கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மற்றொரு ஸ்கூட்டர் ஓட்டி வந்த மதுரை, அண்ணா நகர், அருணாச்சலம் மகன் தாசிகன் ( வயது 19) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.