கோவை ஜூன் 24 கோவை சிவானந்தா காலனி, காந்திநகரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மனைவி அம்மாளு (வயது 40) இவர் நேற்று தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள் இவர்களை கேலி – கிண்டல் செய்தார்களாம்.இதை தட்டி கேட்ட தாய் – மகனை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் வழக்கு பதிவு செய்து திருநங்கைகள் லட்சுமி, பரிமளா, செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0