கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கிணத்து கடவு பக்கம் உள்ள ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 48) இவரது மனைவி நித்யா ( வயது 41) இவர்கள் இருவரும் அங்குள்ள மேற்கு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள் நேற்று மணிகண்டன் தோட்டத்தில் மோட்டார் கம்பிரசர் வால்வை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி நித்யா நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முஹம்மது ஜாபர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனைவி கண் முன் கணவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0