கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகள் 85 சதவீதம் நிறைவு

அடுத்த மாதம் முடிக்க மாநகராட்சி ஆணையாளர்சிவகுரு பிரபாகரன் உத்தரவு.கோவை ஜூன் 26 கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவு கூறும் வகையில் கோவை மாநகரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அதன்படி கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பில் செம்மொழி பூங்கா அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக மத்திய சிறைச்சாலை வளாகத்தில் காலியாக உள்ள 45 ஏக்கரில் 167, 25 கோடி செம்மொழிப் பூங்கா அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த பூங்கா அமைப்பதற்கான பணிகளுக்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி அடிக்கல் நாட்டினார் .அதை தொடர்ந்து செம்மொழி பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாவரவியல் பூங்கா, சூரிய தகடு, அடையாளங்கள், சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும்வாகனங்கள் போன்றவை ரூ93. 44 கோடியில் தயாராகி வருகிறது. மாநாட்டு மையம் ரூ. 25.56கோடியில்தயாராகிறது .உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வர ரூ 7.83 கோடியில் பணி நடக்கிறது. செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத்தளத்தில் வாகனம் நிறுத்தும் இடம் ரூ 7.02 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. செம்மொழி பூங்காவளாகத்தில் நிலத்தடி நீர் தொட்டி கட்டுதல், மழை நீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் ரூ 19.40 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது: மாநாட்டு மையத்திற்கு ஆடியோ மற்றும் வீடியோ அமைப்புகள் தளவாடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் ரூ 7.80 கோடியில் தயாராகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த பூங்கா இந்தியாவிலே தனித்துவத்துடன்பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பூங்காவாக தயாராகி வருகிறது இங்கு 22 விதமான தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு செம்மொழி வ னம்,நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் போன்ற வகையான தோட்டங்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் பல்வேறு விதமான உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கியுள்ளன. பார்வையாளரின் தேவைக்காக இயற்கை அருங்காட்சியகம் , திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்ட வரும் மாநாட்டு மையத்தின் பரப்பளவு 4,830சதுர மீட்டர் ஆகும். இங்கு 1000பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது .முக்கிய பிரமுகர்களுக்கான தனி வழி , உணவு அருந்தும் கூடம், கூட்டஅரங்கம், விருந்தினர்கள் அறை மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் 380 எண்ணிக்கையான 4சக்கர வாகனங்களும், மற்றும் ஒரே நேரத்தில் 10 பஸ்கள் நிறுத்த முடியும். தற்போதைய நிலையில் செம்மொழி பூங்கா கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன மீதமுள்ள 15 சதவீத பணிகள் அடுத்த மாதம் (ஜூலை) முடிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்..