குத்தகைக்கு கொடுத்த வீட்டை மீட்க முடியாததால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஜூன் 26 கோவை – வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 51) கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வடவள்ளி கருப்புசாமி முதலியார் வீதியில் உள்ளதனது மூத்த அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார்.இவர்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை ரூ 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்..அந்த பணத்தை கொடுத்து வீட்டைஅவரால் மீண்டும் மீட்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சுசிலா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.