பீளமேட்டில் இன்று விபத்து..கோவை ஜூன் 26 கோவை அருகேஉள்ள காளப் பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி வனஜா மணி (வயது 60)இவர்கள் இருவரும் இன்று காலையில் பீளமேடு அவிநாசி ரோட்டில் பன் மால் எதிர்புறம் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது கோவையிலிருந்து சேலத்திற்கு சென்று கொண்டிருந்த பாயிண்ட் டூ பாயிண்ட் அரசு பஸ் இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.இதில்வனஜா மணி பஸ் சக்கரத்தில் சிக்கி தலையில் நசுங்கிஅதே இடத்தில் இறந்தார்.கணவர் இடது பக்கம் விழுந்ததால் காயத்துடன் உயிர் தப்பினார்.இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக அரசுபஸ் டிரைவர் குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..விபத்தில் சிக்கி கணவர் கண் முன் மனைவி துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0