கவுண்டம்பாளையம்அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து அரசு ஊழியர் பலி

கோவை ஜூன் 26கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு வசிப்பவர் கருப்பசாமி.இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு இவர் மாடியில் இருந்து தவறி விழுந்து அதே இடத்தில் இறந்தார். இவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.