கோவைஜூன் 27 கோவை போத்தனூர் அண்ணாபுரம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் அன்புராஜ் இவரது மனைவி வாசுகி (வயது 32)இவரது வீட்டில் ஜோசப் (வயது 60) அவரது மனைவி ஜான்சிராணி ( வயது 55 )ஆகியோர் வாடகைக்கு குடியிருந்துவருகிறார்கள்.குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில்இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது .இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவீட்டின் உரிமையாளர் வாசுகி கொடுத்தபோத்தனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜோசப் ( வயது 60) அவரது மனைவி ஜான்சிராணி (வயது 55 )ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதே போலவாடகைக்கு குடியிருக்கும் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் வீட்டின் உரிமையாளர் அன்புராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0