பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருட்டு

கோவை ஜூன் 27 கோவை அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்துக்கு அடியில் பெட்டி கடை நடத்தி வருபவர் ஆறுமுகம் (வயது 53) இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளேபணப்பெட்டியில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரத்தை காணவில்லை.யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆறுமுகம் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.