பீரோ லாக்கரில் இருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவை ஜூனியர் 27 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்புசாமி தேவர் வீதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் அவரது மனைவி சுஜித்ரா ( வயது 34 )இவர் தனது 10 பவுன் தங்க நகைகளை பீரோவில் உள்ள லாக்கரில் வைத்திருந்தார்.. 2 மாதம் கழித்து பார்த்தபோது அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை காணவில்லை. மாயமாகி இருந்தது. இது குறித்து சுஜித்ரா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அன்பு ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.