கோவை ஜூன் 27 கோவை செல்வபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி நேற்று செல்வபுரம் பக்கம் உள்ள தெலுங்கு பாளையம் ரவுண்டான பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சேர்ந்த செரீப் (வயது 40 )என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 180கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளும்,ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல அசோக் நகர் ரவுண்டானா பகுதியில் கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக கெம்பட்டிகாலனி தர்மராஜா கோவில் வீதியைச் சேர்ந்த பாலாஜி ( வயது 35) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 150 லாட்டரி டிக்கெட்டுகளும் ,ஒரு செல்போனும் கைப்பற்றப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0