கோவை ஜூன் 27 மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜநாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் (வயது 72) இவர் முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடன் அவரது மகள் மற்றும் அவரதுமகன் பங்கஜ் சிங் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சாவித்திரி சிங்கை பார்ப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்குமார் சிங் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தார் . பின்னர் கார் மூலம் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார் .அதன்பிறகு கோவை ரெட் பீல்டில் உள்ள கடற்படை அதிகாரிகள் விடுதியில் ஓய்வெடுத்தார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகையை யொட்டி தனியார் மருத்துவமனை மற்றும் அவர் தங்கும் ரெட் பீல்டுபகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0