கோவை ஜூன் 28 கோவை தெற்கு உக்கடம் ,அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் முஸ்தபா, இவரது மகன் ரிஸ்வான் ( வயது 32 )இவர் மீது போக்சோ,கொலை மிரட்டல்,வழிப்பறி போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் இவர் விசாரணைக்காக கோவை போக்சோ நீதிமன்றத்திற்கு விசாரணைக்குநேற்று அழைக்கப்பட்டார்.நீதிபதி இவரை விசாரணைக்கு அழைக்கும் நேரத்தில் ரிஸ்வான் கையில் தேசியக் கொடியுடன் வாயில் பிளேடை வைத்துக்கொண்டுதனக்குத்தானே காயப்படுத்தி கொள்வதாகவும்,,வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பி ரகளை செய்தார். இது குறித்து நீதிமன்ற சிராஸ்தார் ராஜேஸ்வரி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரிஸ்வானை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0