கோவை ஜூன் 28.கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், தலைமையிலும், நேரடி மேற்பார்வையிலும் பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், சூலூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர கேட் மகன் பவன்குமார் (21) என்பவர் கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0