கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறாமலும் தொடங்கப்பட்ட பணிகள் நிறைவு பெறாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை நகராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட அக்கா மலை எஸ்டேட் பகுதியில் உள்ள பேருந்து திருப்பம் பகுதியில் சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச்சுவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சாலைப் பணியை கிடப்பில் போடப்பட்டுள்ள தாகவும், வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தெருவிளக்குகளில் பெரும்பாலான தெருவிளக்குகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின் இணைப்பு வழங்காமல் உள்ளதாகவும் கருமலை முதல் அக்கா மலை எஸ்டேட் பகுதி வரை போடப்பட்டுள்ள குறுகிய உயரமான தார்சாலையின் இருபுறங்களிலும் காங்க்ரீட் தளம் அமைக்காமலும் இதேபோல அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைப்பதாக கூறி பணியை தொடங்கிய நிலையில் சாலையில் ஜல்லிகற்களை மட்டும் போட்டுவிட்டு பல மாதங்களாக பணியை தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தாகவும் இது போன்ற பல்வேறு பணிகளை செய்யாமல் நகராட்சி முடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0