கோவை ஜூலை 2கோவை துடியலூர் பக்கம் உள்ள அப்பநாயக்கன்பாளையம் ,ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் மகாலிங்கம் இவரது மனைவி நித்யா ( வயது 40, )அலுமினியம் டிரேடர்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார்..இவருக்கு முகமத் இக்பால்,அவரது மனைவிதஷ்னீம் தாஜ்ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.இவர்கள் பெங்களூரில் இருந்து அலுமினியம் ஸ்கிராப் அனுப்புவதாக கூறி நித்யாவிடம் 17 லட்சத்து 24 ஆயிரத்து 310 ரூபாயை வங்கி மூலம் பெற்றுக் கொண்டனர்.அலுமினியம் எதுவும் அனுப்பி வைக்கவில்லை. பணத்தை மோசடி செய்து விட்டனர் .இது குறித்து நித்யா துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி முகமது இக்பால், அவரது மனைவி தஷ்னீம் தாஜ் ,பெங்களூர் சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0