கோவை ஜூலை 3 கோவை உப்பிலிபாளையத்தைசேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மனைவி சுஜா இவர்கள் 2 பேரும் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பொள்ளாச்சி குரும்பபாளையத்தைச் சேர்ந்த ரவி ( வயது 42) என்பவர் அறிமுகம் ஆனார். பின்னர் அவர் 2 பேரையும் சந்தித்து தேங்காய் வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே நாம் 3 பேரும் சேர்ந்து விவசாயிகளிடமிருந்து தேங்காயை வாங்கி அதை விற்பனை செய்யலாம் என்று கூறினார் .அதற்கு இருவரும் சம்மதித்தனர் .இதை யடுத்து கடந்த 20 21 ஆம் ஆண்டில் 3 பேரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சி மற்றும் சுற்றிஉள்ள விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை வாங்கி அதை பலருக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கலந்த 20 22 ஆம் ஆண்டு சுஜாவும், அவரது கணவர் பார்த்திபனும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அதில் ரூ. 5 லட்சத்து 23 ஆயிரத்து 166 தேங்காய் களுக்கு கணக்கு இல்லை .அவர்கள் இது தொடர்பாக ரவியிடம் கேட்டனர்.அதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. பலமுறை கேட்டும் பதில் அளிக்கவில்லை. இது குறித்து 2 பேரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரவி 5 லட்சத்து 23 ஆயிரத்து 166தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கியதாக பொய் கணக்கு காட்டி ரூ.59 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த ரவி தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் .இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஒரு வீட்டில் பதுக்கி இருந்த அவரை போலீசார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0