கோவை ஜூலை 3கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் ரூபி நகரை சேர்ந்தவர் கோபு ( வயது 45 )அந்த பகுதியில் பாஸ்ட் புட் வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம உடைந்த கோபு நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்து மனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0