கோவை ஜூலை 18 கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். மில் அதிபர் .இவரது மில்லில் தயாரிக்கப்படும் துணிகளை மும்பையை சேர்ந்த பரத் குமார் மாண்டிட் ( வயது 42) என்பவர் கடந்த 20 22-ஆம் ஆண்டு ரூ 6 கோடிக்கு துணிகள் கொள்முதல் செய்தார். அந்த துணிகள் கண்டெய்னர் மூலம் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது .அதை பெற்று கொண்ட பரத் குமார் மாண்டிட் அதற்கான பணத்தை அனுப்பி வைப்பதாக கூறினார் .அதில் ரு 1கோடியே 50 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 4 கோடியே 50 லட்சத்தை கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்ற பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர் .அவரை பிடிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம் ,சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அத்துடன் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் மற்றும் துறைமுகங்களுக்கும் “லுக் அவுட்” நோட்டீஸ் அனுப்பப்பட்டது .இந்த நிலையில் பரத் குமார் மாண்டிட் வெளிநாடு தப்பி செல்ல மும்பை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். இதை கண்காணித்து விமான நிலைய போலீசார் பரத்குமார் மாண்டிட்டை பிடித்து வைத்து கோவை மாவட்ட குற்ற பிரிவுபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படையினர் மும்பை சென்று பரத்குமார் மாண்டிட்டைநேற்று கைது செய்தனர்.அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ 4.50 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான நபரை கைது செய்தகோவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படையினரைகோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0