புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒட்டல் தொழிலாளி வாக்குமூலம்.கோவை ஜூலை 25 கோவை கரும்புக்கடை பாத்திமா நகரில் வசித்து வந்தவர் நவீன் ( வயது 39 )இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் .அதே ஓட்டலில்திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தயாநிதி ( வயது 42) என்பவரும் வேலை பார்த்து வந்தார் ..இதனால் இருவரும் ஓட்டல் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தனர் .இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி நவீன் அவரது அறையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவருடன் தங்கி இருந்த தயாநிதி மாயமாகிவிட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .அப்போது நவீனுடன் தங்கி இருந்த தயாநிதி கேஸ் ஸ்டவ்வில் உள்ள பர்னரை வைத்து தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது அவரைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தர வின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் கோவையில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் தயாநிதி பணத்தை எடுத்துவிட்டு மதுரை பஸ்சில் ஏறி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து மதுரைக்கு சென்று அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். மதுரையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு பஸ்நிலையத்தில் தயாநிதி சுற்றி திரிவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று நேற்று தயாநிதியை மடக்கி பிடித்து கைது செய்தனர் .தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில்அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள ஆவராம்பட்டி. நான் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என்னுடன் தங்கி இருந்த நவீன் தினமும் என்னை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்தார்.இது எனக்கு பிடிக்கவில்லை. சம்பவத்தன்று என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் கேஸ் ஸ்டவ் பர்னரை எடுத்து தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். இதனால் பயந்து போன நான் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மதுரைக்கு சென்றேன்.. போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தலை மறைவாக இருந்த தயாநிதியை கைது செய்த தனிபடையினரை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், தெற்கு பகுதி துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0