கோவை ஜூலை 29 கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 30 )இவர் தனது நண்பருடன்மினி வேனில் குறிச்சி குளக்கரையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார். பெட்ரோல் நிரப்பியதும் வேனை “ஸ்டார்ட் “செய்தார். அப்போது திடீர் என்று அந்த மினிவேனில் இருந்து புகை வந்தது. இதனால் அந்த மினிவேனுக்குள் இருந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதை விட்டு கீழே இறங்கியதுடன் மினி வேனை சிறிது தூரம் நகர்த்தி விட்டனர். அப்போது அந்த மினிவேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்த பகுதியில் காற்று வேகமாக வீசியதால் தீப்பிடித்து மினி வேனில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது .இதனால் அதிர்ச்சி அடைந்தபெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு இருந்த தீ கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பவுடரை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பகுதியில் பீச்சி அடித்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர் .இதில் அந்த மினிவேன் முழுவதும் எரிந்து நாசமனது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்து தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0