கோவை ஆகஸ்ட் 4 கோவை டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 56) பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர்.நேற்று குடிபோதையில் உக்கடம் பெரிய குளத்தில் விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மனைவி கனக ஜோதி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமுனா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும்விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0